ஞாயிறு, 1 நவம்பர், 2009

அந்தப்பரிசுப் பெட்டியில் இருந்தது ஈழத்தமிழனின் தலையா..? – கொந்தளிக்கிறார் நாஞ்சில் சம்பத்

முதன்மைச்செய்தி
October 31st, 2009

siva300முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னரான முதலாவது இனப் படுகொலை கொழும்பில் அரங்கேற்றப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வியாழக்கிழமை பம்பலப்பிட்டி கடலில் வைத்து நடாத்தப்பட்ட இந்தப் படுகொலை சம்பவத்தில் உயிரிழந்தவர் இரத்மலானையில் வசித்த 26 வயதுடைய பாலகிருஷ்ணன் சிவகுமார் என அடையாளம் காணப்பட்டது. விரிவு… »


பிரதான செய்திகள்


nedumaranஈழத் தமிழர் பிரச்சினையை அணையாத தீபமாக கொண்டு செலுத்தும் தமிழகத் தலைவர் நெடுமாறன். அரசியல் ரீதியாக வெவ்வேறு முடிவுகள் எடுக்கும் தலைவர்களையும் ஒன்றாக இனச்சரடு வைத்து இணைத்துச் செல்வது இவர்தான். இதனால் முதல்வர் குருணாநிதிக்கு முதல் எதிரியானார். அவர் ஆனந்த விகடன் வார இதழுக்கு அளித்த பேட்டியின் திரு.பிரபாகரன் குறித்து கேட்ட கேள்விக்கான பதில் வருமாறு.

31 October 2009

europe_flag"ஜி.எஸ்.பி." வரிச்சலுகையை வழங்குவது தொடர்பாக இலங்கையுடன் மேற்கொள்ளப்பட்டு வந்த பேச்சுகள் முடிவடைந்துவிட்டன என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் பேர்னாட் சவேஜ் பிரிட்டனின் "பினான்சியல் டைம்ஸ்" செய்தித்தாளுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

31 October 2009

barbwire_peoplesஒரே நாளில் 40000 தமிழர்கள் அகதி முகாம்களி லிருந்து தங்களது வீடுகளுக்கு திருப்பி அனுப்பப் பட்டுவிட்டதாக ஆளும் கட்சியான தி.மு.க. ஆதரவு ஊடகங்களிலும், பார்ப்பன 'இந்து' ஏடும் பிரச்சாரம் செய்கின்றன. தி.மு.க. – காங்கிரஸ் கட்சி, நாடாளு மன்ற உறுப்பினர்களை இலங்கைக்கு அனுப்பி, கலைஞர் ஈட்டித் தந்த வெற்றி என்றும், பாராட்டு மாலைகளை கலைஞர் தோளுக்கு சூட்டுகின்றன இந்த ஊடகங்கள்.

31 October 2009

dailymirror_28102009[2ஆம் இணைப்பு] நேற்று காலையில் பம்பலப்பிட்டி கடற்கரையில் பல மக்கள் பார்த்துக் கொண்டிருக்க ஒரு நபரை சிலர் பலவந்தமாக கடலில் மூழ்கடித்துள்ளனர்.

30 October 2009


ஏனைய செய்திகள்


rajapakse_kanimozhiதமிழ் ஈழத்தை சுடுகாடாக்கிவிட்டு கோவையிலே தமிழுக்கு மாநாடு என்பது உலகத் தமிழர்களை ஏமாற்றுவதற்கே, கனிமொழி வாங்கிய பரிசுப்பெட்டியில் இருந்தது ஈழத்தமிழனின் தலையா என்றும் குமுதம் இதழுக்கு அளித்த பேட்டியில் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

1 November 2009


karunaமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா 'மைனாரிட்டி அரசு' என்கிற வார்த்தையை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருப்பதைப்போல், 'சகோதர யுத்தம்' என்கிற வார்த்தையை உடும்புப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் கருணாநிதி.

31 October 2009


[காணொளி] மகிந்தவின் வருகைக்கு எதிராக சென்னையில் ஆர்ப்பாட்டம்

31 October 2009


siva300பம்பலப்பிட்டிக் கடலில் மூழ்க வைத்துக் கொலை செய்யப்பட்ட இளைஞர் பாலவர்ணன் சிவகுமாரனின் சடலம் நேற்றுக் கரை ஒதுங்கியதையடுத்து அவரது சகோதரர் அவரை அடையாளம் காட்டினார்.

31 October 2009


hand-bombமட்டக்களப்பு மாவட்டத்தில் மீள் குடியமர்த்தப்பட்ட ஊறுகாமம் பகுதியில் கைக்குண்டு ஒன்று வெடித்ததில் இரு சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

31 October 2009


vaiko-33சிறீலங்கா அதிபர் ராஜபக்சே திருப்பதி கோவிலுக்கு வர திட்டமிட்டார். அதன்படி சிறீலங்கா அதிகாரிகள், சித்தூர் மாவட்ட கலெக்டர் சேஷாத்திரியிடம் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து, நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர். பின்னர் ராஜபக்சே திருப்பதி வருவது உறுதியானது.

31 October 2009


Rajapaksa visiting Tirupatiசிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று சனிக்கிழமை பிற்பகல் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதிக்குச் சென்று வெங்கசடாசபதியை தரிசனம் செய்துள்ளார்.

31 October 2009


ranil001sபன்றிக் காய்ச்சல் நாட்டிற்கு பீதியை ஏற்படுத்தியிருப்பதைப் போன்றே சரத் என்ற பெயர் அரசாங்கத்திற்கு பீதியை ஏற்படுத்தியிருப்பதாகவும் இந்தப் பீதியை ஒழிப்பதற்காக அரசாங்கம் தற்போது ஊடக அடக்குமுறையில் ஈடுபட்டிருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

31 October 2009


s.p.tisanayakaசிறீலங்கா அதிபர் தேர்தலில் நிறுத்தப்படும் பொது வேட்பாளர் நியமம் குறித்த முடிவு இன்றும் ஒரு வார காலத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

31 October 2009


siva[காணொளி] கொழும்பு பம்பலப்பிட்டியில் மனநிலை பாதிக்கப்பட்ட பாலசுப்பிரமணியம் சிவகுமாரனை பல நூறு பேர் பார்த்திருக்க, பட்டப்பகலில் அடித்து கடலில் தள்ளி கொலை செய்த காட்டுமிராண்டி அராஜகத்திற்கு எதிரான சாத்வீக கண்டன ஆர்ப்பாட்டத்தை எதிர்வரும் 4ம் திகதி புதன்கிழமை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் நடத்துவதற்கு ஜனநாயக மக்கள் முன்னணி முடிவு செய்துள்ளது.

31 October 2009


unp_logoதேர்தல் ஆணையாளரிடம் ஐ.தே.க. வலியுறுத்து… இல்லையேல் வடக்கில் வாக்குக்கொள்ளைதான் இடம்பெறும். வவுனியா அகதிமுகாம்களில் உள்ள வன்னி அகதிகள் அனைவரையும் மீளக் குடியமர்த்தி விட்டே ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்த நடவடிக்கை எடுக்கவேண் டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

31 October 2009


gspஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதிக்கான வரிக் கட்டணம் ஏதுமின்றியே தைத்த ஆடைகளை ஏற்றுமதி செய்வதற்கு வசதியாக இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த "ஜி.எஸ்.பி." வரிச்சலுகை நீக்கப்படுமா என்ற சந்தேகம் வலுத்து வருகையில், இது தொடர்பான வாதப்பிரதிவாதங்களும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன.

31 October 2009


uk_30102009[படம்] சிறீலங்கா அர‌சாங்க‌த்தினால் வ‌ன்னியில் இருந்து சிறைபிடிக்க‌ப்ப‌ட்டு வ‌வுனியா வ‌தைமுகாம்க‌ளில் அடைக்க‌ப்ப‌ட்டிருக்கும் அப்பாவி த‌மிழ் ம‌க்க‌ளை விடுவிக்க‌ கோரி இன்று 9 ஆவ‌து வெள்ளிக்கிழ‌மையாக‌ பிரித்தானிய‌ பிர‌த‌ம‌ர் காரியால‌ய‌த்தின் முன்ற‌லில் பிரித்தானியா த‌மிழ் ம‌க்க‌ளால் தொட‌ர் க‌வ‌ன‌யீர்ப்பு போராட்ட‌ம் முன்னெடுக்க‌ப்ப‌ட்ட‌து.

31 October 2009


Bishop de Chickeraகொழும்பு பம்பலப்பிட்டியில் கடலில் மூழ்கடித்து தமிழ் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்துமாறு கொழும்பு மாவட்ட அங்கிலிக்கன் ஆயர் வணக்கத்துக்குரிய டுலிப் சிக்கேரா கோரிக்கை விடுத்துள்ளார்.

31 October 2009


Indonesia_flagஆஸ்திரேலியக் கப்பலில், இந்தோனேஷியத் துறைமுகத்தில் உள்ள 78 இலங்கையர்களையும் இறக்குவதற்குப் பலத்தைப் பயன்படுத்தப் போவதில்லையென இந்தோனேஷியா தெரிவித்துள்ளது.

31 October 2009


5 media orginizationசண்டே லீடர் ஆசிரியர் பெரட்றிக்கா ஜான்ஸ் அதன் செய்தி ஆசிரியர் முன்ஸ் முஜ்தாக் ஆகியோருக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தலை ஐந்து ஊடக அமைப்புக்களின் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது.







--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக