மரணம்: லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மரணம்: லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 17 டிசம்பர், 2011

வாகன விபத்தில் நாளொன்றுக்கு 6 பேர் மரணம்: மோட்டார் போக்குவரத்துப் பிரிவு

இலங்கையில் நாளொன்றுக்கு 92 வாகன விபத்துக்கள் இடம்பெறுவதாகவும் இதனால் ஆறு மரணங்கள் சம்பவிப்பதாகவும் பொலிஸ் மோட்டார் போக்குவரத்துப் பிரிவு பணிப்பாளர் சேனக்க கமகே தெரிவித்துள்ளார்.

வாகன விபத்துக்களினால் இந்த நாட்டுக்கு வருடாந்தம் 10 பில்லியன் ரூபா சொத்து நட்டம் ஏற்படுவதாகவும் இந்த நிலைமை நாட்டின் பொருளாதாரத்தை நேரடியாக பாதிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விபத்துக்களில் 85 வீதமானவை சாரதிகள் மற்றும் பாதசாரிகளின் கவனயீனத்தால் ஏற்படுவதாகவும், ஏனைய 15 வீதம் இயந்திர கோளாறுகளினால் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

வாகனம் செலுத்தும் போது உறங்குதல், பிள்ளைகளை கொஞ்சுதல், உரையாடலில் ஈடுபடல், தொலைபேசி பேசுதல், மது அருந்துதல், உணவு உட்கொள்ளல் போன்ற காரணிகளினால் இவ்வாறான விபத்துக்கள் அதிகம் இடம்பெறுகின்றது.

ஒரு வாகனம் மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்படும் சந்தர்ப்பங்களினால் அதிகளவான விபத்துக்கள் இடம்பெறுவதாக பொலிஸ் மோட்டார் போக்குவரத்துப் பிரிவு புள்ளி விபரத் தரவுகள் தெரிவிக்கின்றன.

பண்டிகைக் காலத்தில் வாகன விபத்துக்களை தவிர்க்கும் நோக்கில் பொலிஸ் மோட்டார் போக்குவரத்துப் பிரிவு மக்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Content of Popup

நான்காவது கட்ட ஈழப்போரில் 11,812 விடுதலைப் புலிகள் மரணம்: ஆணைக்குழு

இலங்கையில் இடம்பெற்ற நான்காவது கட்ட ஈழப்போரில் 11,812 விடுதலைப் புலிகள் மரணமடைந்துள்ளனர் என  அடையாளம் காணப்பட்டுள்ளதாக நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

2006 ஜுலையில் போர் தொடங்கியதில் இருந்து 2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்தது வரையிலான காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்தின் படைப்பிரிவிற்கும் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்ட இழப்புகள் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கால கட்டத்தில் இலங்கை இராணுவத்தின் தரப்பில் 5556 பேர் கொல்லப்பட்டனர் என்றும், போரின் போது 169 இராணுவத்தினர் காணாற்போனதாகவும், 28,414 படையினர் காயமடைந்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் 22,247 பேரை இந்தக் காலப்பகுதியில் இழந்துள்ளதாகவும், இவர்களில் 11,812 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் சீருடைகளை வைத்தும், கழுத்துப்பட்டி மூலமும் மேலும், புலிகளின் தகவல் தொடர்புகளை இடைமறித்தும் இதனை உறுதி செய்ததாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு நல்லிணக்க ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Content of Popup