சிறைச்சாலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறைச்சாலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 18 டிசம்பர், 2011

சரத் பொன்சேகாவிற்கு பிறந்த நாள் கேக் வழங்க சிறைச்சாலை அதிகாரிகள் மறுப்பு

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பிறந்த தினம் இன்றாகும்.பிறந்த தினத்தை முன்னிட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலர் சரத் பொன்சேகாவை சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.

கட்சியின் இணைப் பிரதித் தலைவர்களான கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, பாலித ரங்கே பண்டார மற்றும் பாலித தெவரப்பெரும ஆகியோர் சிறைச்சாலைக்கு சென்று சரத் பொன்சேகாவை பார்வையிட்டுள்ளனர்.

பிறந்த நாளை முன்னிட்டு பாலித ரங்கே பண்டாரவும், பாலித தெவரப்பெருமவும் கேக் ஒன்றை சிறைச்சாலைக்கு எடுத்து சென்றிருந்தனர்.

எனினும், இந்த கேக்கை சரத் பொன்சேகாவிற்கு வழங்கக் கூடாது என சிறைச்சாலை அதிகாரிகள் மறுப்பு வெளியிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 

Content of Popup

வெள்ளி, 16 டிசம்பர், 2011

கின்னஸ் சாதனைக்கு வெலிக்கடை சிறைச்சாலை தயார்

உலகின் மிக நீலமான புதுவருட வாழ்த்து அட்டை ஒன்றை தயாரித்து புதிய கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் வெலிக்கடை சிறைச்சாலை களமிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதுவருட வாழ்த்து அட்டையை தயாரிக்கும் பணியில் கைதிகள், சிறைச்சாலை அதிகாரிகள் எனப் பலர் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் 195 அடி நீலமும் 5 அடி அகலமும் கொண்டு தயாரிக்கப்பட்டு வரும் புதுவருட வாழ்த்து அட்டை எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Content of Popup