ஞாயிறு, 1 ஜனவரி, 2012

விசாரணைகளையும் எதிர்கொள்ள தயார்- ஐ.தே.கட்சியின் பா.உ தயாசிறி

தனக்கு எதிராக மேற்கெொள்ளப்படும் எந்தவெொரு ஒழுக்காற்று விசாரணைகளையும் எதிர்கெொள்ளத் தயாராக இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கட்சிக்காக உண்மையாக உழைக்கும் தன்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பாக தான் கவலையடைவதாகவும் எந்தவொரு தலைவருக்கு எதிராகவும் கருத்துக்களை தெரிவிக்க தான் ஒருபோதும் பின்னிற்கப் போவதில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி முதியவர்களைக் கொண்ட கட்சியாக மாறி விட்டதெனவும் அரசுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலமே இதனை இளைஞர்கள் உள்ள கட்சியாக மாற்ற முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்காக சிறிகொத்தவில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு மோசடியானது என தயாசிறி ஜயசேகர குற்றம் சுமத்தியிருந்தார். இக்குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம், சிரேஷ்ட தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Content of Popup

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக