ஞாயிறு, 1 ஜனவரி, 2012

அடுத்த மாதம் யாழ்ப்பாணம் செல்லவுள்ள அப்துல் கலாம்

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும் தமிழகத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற விஞ்ஞானியுமான அப்துல்கலாம் ஜனவரி மாதம் மூன்றாம் வாரத்தில் யாழ்ப்பாணம் வரவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை இந்தியத் தூதரகம் மேற் கொண்டுள்ளது.

ஜனவரி 22 அல்லது 23 ஆம் திகதியில் யாழ்ப்பாணம் வரும் கலாம் யாழ். பல்கலைக்கழகத்தில் உரையாற்ற உள்ளார். பின்னர் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீட மாணவர்களில் இருந்தும் தெரிவு செய்யப்பட்டவர்களைச் சந்தித்துப் பேசுகிறார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் வருகைதரவுள்ள அவர், அங்கும் மாணவர்களைச் சந்தித்துப் பேசுவார். கலாம் யாழ்ப்பாணம் வருவதை உறுதி செய்தது இந்தியத் தூதரகம். அவரது வருகையின் போதான நிகழ்ச்சி நிரலில் யாழ்ப்பாணத்தில் இந்த மூன்று விடயங்களுமே இப்போதைக்குத் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தது.

Content of Popup

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக