சனி, 17 டிசம்பர், 2011

சட்டவிரோதமாக இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது

ஹட்டன் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 சந்தேகநபர்கள் இன்று (17.12.2011) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹட்டன் - நோர்வூட் சாஞ்சிமலை பிரதேசத்திலே இவர்கள் சட்டவிரோத முறையில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஸ்கெலிய மேலதிக பொலிஸ் அதிகாரியின் ஆலோசனையின்படி விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதுடன், இரத்தினக்கல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Content of Popup

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக