திங்கள், 25 ஜூலை, 2011

போதைப் பொருள் வைத்திருந்தவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு

போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஒருவர் உரிய சாட்சியங்களுடன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து கொழும்பு மேல் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை வழங்கி இன்று தீர்ப்பளித்துள்ளது.

சட்டமா அதிபரினால் குறித்த நபருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

ஹெரோயின் வகை போதைப் பொருள் 543 கிரேம் குறித்த நபரிடம் இருந்தபோது அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தரப்பால் நீதிமன்றில் கூறப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக இந்த வழங்கு கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் தக்க ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ப்ரீதி பத்மத் சுரசேன மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக