திங்கள், 25 ஜூலை, 2011

தெய்வேந்திர முனையில் ஆரம்பித்த நடைபயணம் யாழ்ப்பாணத்தில்

கலர் ஒவ் கறேஞ் நம்பிக்கை நிதியத்தினால் ஆரம்பிக்கப்பட்ட நடைப்பயணம் இன்று பகல் யாழ்ப்பாணத்தை சென்றடைந்துள்ளது. கடந்த முதலாம் திகதி தெய்வேந்திர முனையில் இருந்து சிறுவர்களுக்கான புற்று நோய் வைத்தியசாலையை யாழ்ப்பாணத்தில் நிர்மாணிப்பதற்காக நிதி சேகரிக்கும் முகமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த நடைப்பயணம் 25வது நாளான இன்று யாழ்ப்பாணத்தை சென்றடைந்துள்ளது.

கடந்த 25 நாட்களில் சுமார் 640 கிலோ மீற்றர் தூரத்தை கடந்துள்ளதுடன் சுமார் 127 மில்லியன் ரூபா இன்று வரை சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படடுகிறது. புற்று நோய் வைத்தியசாலையை நிர்மாணிப்பதறக்கு சுமார் 200 மில்லியன் ரூபாவை இலக்காகக் கொண்டே இந்த நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களான டில்சான், மஹேல ஜெயவர்தன, சங்கக்கார, மத்தியூஸ், குத்துச்சண்டை வீரர் வன்னி ஆராய்ச்சி உட்பட பலரும் இறுதி நாள் நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. --

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக