திங்கள், 25 ஜூலை, 2011

வாக்குகளின் அடிப்படையில் பதவிகளுக்கு உறுப்பினர்கள் நியமனம்

தனிநபர் வாக்குகள் அதிகம் பெற்றவர்களே உள்ளூராட்சி சபைகளுக்கான உயர்பதவிகளில் அமர்த்தப்படுவர் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

மேலும், இதுவரையில் தனக்கு தனிநபர்கள் பெற்றுக் கொண்ட வாக்குகள் தொடர்பான ஆவணங்கள் கிடைக்கப் பெறவில்லை எனவும் அவ்வாறான ஆவணம் எதிர்வரும் 27ம் திகதி கிடைக்கப்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த ஆவணம் கிடைக்கப்பெற்ற பின்னர் உள்ளூராட்சி சபைகளுக்கான பதவிகளுக்கு தெரிவுசெய்யப்பட்டோர் வாக்குகளின் அடிப்படையில் பதவிகளுக்கு நியமிக்கப்படுவர் என அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிந்து 14 நாட்களுள் அவ்வாறு பதவிகளுக்கான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படாவிட்டால், தேர்தல் ஆணையாளருக்கு வாக்குகளின் அடிப்படையில் நியமனங்களை வழங்கும் உரிமை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக