வியாழன், 28 ஜூலை, 2011

பெல்ஜியத்தால் இலங்கை மாணவர்களுக்கு கணினிகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப்பகுதியில் உள்ள மாணவர்களின் கல்வித்தரத்தை கருத்தில் கொண்டு புலம்பெயர் அமைப்புக்களினால் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன.

பெல்ஜியம் நாட்டில் இயங்கிவரும் லங்கா மாதாவின் பிள்ளைகள் சங்கத்தினால் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட கன்னங்குடா மகாவித்தியாலயத்துக்கு ஒரு தொகை கணினிகள் வழங்கிவைக்கப்பட்டன.

கன்னங்குடா மகாவித்தியாலய அதிபர் முரகானந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் லங்கா மாதாவின் பிள்ளைகள் சங்கத்தின் குடும்தை சேர்ந்தவர்கள், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பணிப்பாளர் கே.பாஸ்கரன் உட்பட அதிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக