வியாழன், 28 ஜூலை, 2011

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 19 நபர்கள் கைது

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை, கல்முனைக்குடி, கல்முனை, மணல்சேனை, நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு போன்ற பிரதேசங்களில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 19 நபர்கள் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அம்பாரை பொலிசாரும் இலங்கை மின்சார சபையின் விஷேட பிரிவினரும் இணைந்து மேற்கொண்ட சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவதற்கான நடவடிக்கைகளை கல்முனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக