செவ்வாய், 26 ஜூலை, 2011

அரசின் வாக்குறுதிகள் மீது விரிவுரையாளர்களுக்கு சந்தேகம்

தாம் முன்னெடுத்துவந்த பணிநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ள நிலையில் அதற்கென அரசாங்கம் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றுமா என்ற சந்தேகம் நிலவுவதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய சங்கத்தின் தலைவர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி இவ்வாறு சந்தேகம் வெளியிட்டார்.

பிரச்சினைகள் இன்றி ஏகமனதாக தாம் இத்தீர்மானத்தை எடுக்கவில்லை எனத் தெரிவித்த அவர், பெரும்பான்மை அடிப்படையில் இத்தீர்மானத்தை எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தமக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றத் தவறினால் கடும் நடவடிக்கையில் இறங்குவோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டுமென அவர் எச்சரித்துள்ளார்.

இந்த நேரத்தில் வாக்குறுதிகளுடன் விளையாட வேண்டாம் எனவும் எதிர்வரும் வரவு - செலவு திட்டத்தில் தமக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக