செவ்வாய், 26 ஜூலை, 2011

தமிழர்களுடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளவும் - முன்னாள் ஜனாதிபதி கோரிக்கை

அதிகாரப் பகிர்வின் மூலம் இனங்களுக்கு இடையில் இணக்கப்பாட்டினை ஏற்படுத்த முடியும் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை மக்களுடன் அரசாங்கம் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு ஆர்வம் காட்ட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் ஏனைய மாகாண சபைகளைப் போன்றே வடக்கு கிழக்கிலும் மாகாண சபைகள் இயங்குவதற்கு தேவையான பின்னணி ஏற்படுத்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களுடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதன் மூலம் பலம் குன்றுவதாகக் கருதக் கூடாது எனவும் பல்வேறு இன சமூகங்கள் ஒன்றிணைவதனால் பலம் மேலும் அதிகரிக்கும் எனவும் சந்திரிக்கா சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் நீதவான் கே. பாலகிட்னார்வின் நினைவுப் பேருரையில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய போது அவர் இதனைக் தெரிவித்தார்.

அத்துடன் நாட்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்காது போனமையின் ஊடாக தான் தவறிழைத்து விட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கவலை வெளியிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக