வியாழன், 21 ஜூலை, 2011

நிர்வாகசேவை பயிற்சியாளர்களை தேர்தல் கடமையில் இருந்து நிறுத்துக

யாழ்.குடநாட்டில் அரச நிர்வாகசேவையில் பயிற்சி பெறும் பயிற்சியாளர்கள் 30 பேர் தேர்தல் கடமைகளுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களை உடனடியாக தேர்தல் கடமைகளில் இருந்து நிறுத்த வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடல் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தலைமையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

யாழ்.உதவித் தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் மற்றும் உதவித் தேர்தல் ஆணையாளர் மு.அ.கருணாநிதி தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுபினர்களான சுரேஷ்பிரேம சந்திரன், சரவணபவன்,அப்பாத்துரை விநாயகமூர்த்தி மற்றும் வேட்பாளர்களான சிவாஜிலிங்கம் உட்பட பலரும், ஈ.பி.டி.பி கட்சி சார்பில் சட்டத்தரணி ரங்கன் மற்றும் ஐ.ம.சு.கூ , ஐ.தே.க வேட்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக