வியாழன், 21 ஜூலை, 2011

யாழில் தேர்தலுக்கு உத்தரவாதம் அளிக்கப்படவில்லை

யாழில் நீதியான நேர்மையான தேர்தலுக்கு உத்தரவாதம் அளிக்கப்படவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் குற்றம்சுமத்தியுள்ளார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடல் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தலைமையில் இடம்பெற்றுக் கொண்டிருந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல முறைப்படுகள் செய்த போது அவை எவற்றுக்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறி அதற்கான காரணம் என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை, ஜே.வி.பி கட்சியின் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் இராமலிங்ம் சந்திரசேகரன் நியாயமான தேர்தல் நடைபெறாவிட்டால் ஜே.வி.பி செய்யும் சேவைகளில் இருந்து விலகிக் கொள்ளும் என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக