திங்கள், 25 ஜூலை, 2011

மரக்கறி விலைகளில் வீழ்ச்சி ஏற்படுமாம்

எதிர்வரும் சில வாரங்களில் மரக்கறியின் விலையில் வீழ்ச்சி ஏற்படும் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் விவசாயத்துறையை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கைகள் காரணமாகவே இது சாத்தியமாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை மரக்கறி உற்பத்தி செய்யும் விவசாயிகள் பாரிய நட்டத்தை எதிர்நோக்காத விதத்தில் அரசாங்கம் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை தற்போது அரசி உற்பத்தியில் நாடு தன்னிறைவு கண்டுள்ளது.

இதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுத்துச் செல்லப்படும் நாம் பயிரிடுவோம் நாட்டை மேம்படுத்துவோம் என்ற திட்டத்தின் மூலமே இந்த நிலை சாத்தியமாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக