திங்கள், 25 ஜூலை, 2011

இலங்கைத் தமிழர்களுக்காக ராஜீவ் காந்தி உயிர் தியாகம்

இலங்கை தமிழர்களுக்காக ராஜீவ் காந்தி உயிர் தியாகம் செய்தார். ஆனால் தி.மு.கவில் இது போல் யாராவது உயிர் தியாகம் செய்தது உண்டா? திமுகவிற்கு இனி எதிர்காலம் இருப்பதாக தெரியவில்லை. அது கேள்விக்குறியாக உள்ளது என்று இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் யுவராஜா தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு பாதயத்திரை மேற்கொண்ட இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு பாரட்டுவிழா ஈரோட்டில் நடைப்பெற்றது.

இந்த விழாவிற்கு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் யுவராஜா தலைமை தாங்கி, உறுப்பினர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

பின்பு அவர் உரையாற்றுகையில்:-

இலங்கை தமிழர்களுக்காக ராஜீவ் காந்தி உயிர்தியாகம் செய்தார். ஆனால் திமுகவில் இது போல் யாராவது உயிர் தியாகம் செய்தது உண்டா? திமுகவிற்கு இனி எதிர்காலம் இருப்பதாக தெரியவில்லை. அது கேள்விகுறியாக உள்ளது.

தவறு மேல் தவறு செய்து விட்டு டெல்லி திகார் சிறையில் தற்போது உள்ளே இருப்பது யார் என்று உங்களுக்கு நன்கு தெரியும். எத்தனை பொதுக் கூட்டம் போட்டலும் உண்மையை நிச்சயம் மறைக்க முடியாது என்றார் என்றார்.

இந்த விழாவில் முன்னால் எம்.எல்.ஏ. விடியல் சேகர்,மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அப்பாஸ் உள்பட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக