சனி, 23 ஜூலை, 2011

ஜெயலலிதாவுக்கு ஜனாதிபதி அழைப்பு

இலங்கையின் வடபகுதியின் உண்மை நிலைவரத்தை பார்வையிடுவதற்காக அங்கு விஜயம் செய்யுமாறு இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியாவின் இந்து பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலின் போதே ஜனாதிபதி இதைத் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எமது உயர்ஸ்தானிகர் எனது அழைப்பை அனுப்பினார். அவர் தயாரில்லை என்றால் அல்லது அவருக்குள்ள வேலைப்பளு அதிகமிருந்தால் அவர் பாராளுமன்ற உறுப்பினர்களை அனுப்பிவைக்கமுடியும்.

பாராளுமன்ற உறுப்பினர்களை அனுப்பிவைப்பது குறித்து அவர் மத்திய அரசாங்கத்துடன் கதைக்கமுடியும். அதனை ஏற்றுக்கொள்வதற்கு நான் தயார். தமிழ்நாட்டிலிருந்து மாத்திரமல்லாமல் ஏனைய மாநிலங்களைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் இலங்கையின் வடபகுதிக்கு விஜயம் செய்து அங்குள்ள நிலைமைகளை அவர்கள் பார்வையிடமுடியும் என ஜனாதிபதி கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக