சனி, 23 ஜூலை, 2011

இலங்கை இராணுவத்தினருக்கு இந்தியாவில் எதிர்ப்பு

இலங்கை இராணுவ வீரர்களுக்கு குன்னூர இராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய நாம் தமிழர் இயக்கத்தினர் 150 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

பெரியார் தி.க., நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் குன்னூரில் நேற்றுமாலை போராட்டம் நடத்தினர்.

இதனால் 200க்கும் மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் நிலவியது.

குன்னூர் வெலிங்டன் இராணுவ மையம் முன்பு நாம் தமிழர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுதது பொலிஸாருக்கும் பல்வேறு அமைப்புகளுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

மறியலில் ஈடுபட்டதாக நாம் தமிழர் இயக்கத்தினர் 150 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக