வியாழன், 21 ஜூலை, 2011

மட்டக்களப்பில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

இன்று காலை செட்டிபாளையம் கண்ணகியம்மன் ஆலய வீதியில் உள்ள வயல்வெளியில் உள்ள வேப்பை மரம் ஒன்றிலேயே இந்த சடலத்தை களுவாஞ்சிகுடி பொலிஸார் மீட்டுள்ளனர்.

செட்டிபாளையம் தெற்கு பிரதான வீதியை சேர்ந்த கிருஸ்ணபிள்ளை யோகேஸ்வரன் (21வயது) என்ற இளைஞனே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் இருந்து மீட்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் ஏற்கனவே திருமணம் செய்து விவாகரத்து பெற்றுள்ள நிலையில் மீண்டும் ஒரு பெண்ணை காதலித்து அந்த திருமணம் தொடர்பில் ஏற்பட்ட குடும்பத்தகராரு காரணமாகவே இந்த தற்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேநேரம் இவர் தன்னைத்தானே தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பிரதேச மரண விசாரணை அதிகாரி சண்முகம் பேரின்பநாயகம் தெரிவித்தார்.

இதேவேளை களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சர் குணசிங்கம் சுகுணனின் வைத்திய பரிசோதனையை அடுத்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக