வெள்ளி, 22 ஜூலை, 2011

கனடாவில் 30 யுத்த குற்றவாளிகள் தலைமறைவு

யுத்த குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குற்றவாளிகளான இலங்கையர்கள் இருவர் உட்பட முப்பது பேர் கனடாவில் தலைமறைவாக வாழ்ந்து வருவதாக பிரதமர் ஸ்டீபன் ஹர்பர் தெரிவித்துள்ளார்.

புஞ்சா என அழைக்கப்படும் ஜெரோம் பெனாண்டோ மற்றும் அசோகா குலத்துங்க இளந்தரிதேவகே ஆகிய இரண்டு இலங்கையர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

கனேடிய எல்லைப் பாதுகாப்பு சேவை முகவர் இணையத்தில் சந்தேக நபர்கள் குறித்த பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சமூக பாதுகாப்பினை நிலை நிறுத்துவதற்கு பொதுமக்களின் உதவியை நாடுவதாக கனேடிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விக் டோவ்ஸ் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக