வியாழன், 28 ஜூலை, 2011

யாழ். வைத்தியஸ்வரக் கல்லூரி மாணவர்கள் இருவர் திடீர் மாயம்

யாழ். வைத்தியஸ்வரக் கல்லூரியில் தரம் 9 கல்வி கற்கும் மாணவர்கள் இருவர் கடந்த 26 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் அவர்களது பெற்றோர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இம் மாணவர்கள் இருவரும் பாடசாலை முடிந்து வீட்டுக்கு வந்து பாடசாலை ஒப்படை ஒன்று இருப்பதாகவும் அதற்கு தாங்கள் களவேலை செய்யவேண்டும் என்று கூறிவிட்டு 26 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு வெளியேறிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இவர்கள் இருவரும் இன்றுவரை வீடு திரும்பவில்லை என பெற்றோரின் முறைப்பாட்டிலிருந்து தெரியவந்துள்ளது.

இம் மாணவர்களை கண்டுபிடித்து தருமாறு யாழ். பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக யாழ். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக