புதன், 27 ஜூலை, 2011

யாழில் தங்கச்சங்கிலி அறுப்பு

யாழ். இராமநாதன் நுண்கலைப்பீட மாணவி ஒருவரின் தங்கச் சங்கிலி இனம் தெரியாத மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் அறுத்துச் செல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஆடியபாதம் வீதியில் உள்ள புகையிரதச் சந்தியில் இன்று இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இராமநாதன் நுண்கலைப் பீடத்தில் கற்கும் மாணவிகள் மோட்டார் சைக்கிள்களில் ஆடியபாதம் வீதியின் ஊடாக பல்கலைக்கழகத்திற்கு சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மாணவியின் தங்கச் சங்கிலியை அறுத்து சென்றதுடன் மாணவியைக் கீழே தள்ளி விழுத்திவிட்டு சென்றுள்ளனர்.

கீழே விழுந்த மாணவியின் தலையின் பின்புறத்தில் பலமாக அடிபட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த மாணவிக்குப் பல்கலைக்கழக மருத்துவ நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அம்பியூலன்ஸ் மூலம் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக