வியாழன், 28 ஜூலை, 2011

நேரில் கண்ட சாட்சியத்துடன் சனல் 4வின் மற்றுமொரு அதிர்ச்சி காணொளி

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தகுற்றங்களுக்கு ஆதாரமென கூறி சனல் 4 மற்றுமொரு 13 நிமிட காணொளித் தொகுப்பினை ஒளிபரப்பியுள்ளது.

இந்த காணொளியில் இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்த சம்பவங்களை நேரில் கண்ட சாட்சியாளர்கள் என இரு யுத்த வீரர்களது நேர்காணல்களும் ஒளிபரப்பப்பட்டுள்ளன.

குறித்த காணொளியில் சாட்சியம் எனக் கூறப்பட்ட இருவரது முகங்களும் அடையாளம் காணமுடியாது மறைக்கப்பட்டிருந்தது. அவர்கள் இருவரும் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். இவர்களின் பெயர் பெனாண்டோ மற்றும் சுஸ்ரத எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது பாதுகாப்பு தரப்பு உயரதிகாரிகளிடமிருந்தும் சிவில் உயரதிகாரிகளிடமிருந்தும் "முடித்துவிடுங்கள்" என உத்தரவிடப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த காணொளியின் நிறைவில் அண்மையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் உரையில் சிறுபகுதியும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

தன் மகன் யுத்தகுற்ற ஆவணப் படத்தை பாரத்துவிட்டு, தான் இலங்கையர் மற்றும் சிங்களவர் என்று சொல்லுவதற்கு வெட்கப்படுவதாக தொலைபேசியில் தன்னிடம் தெரிவித்ததாக உரையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க கூறியிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக