வெள்ளி, 22 ஜூலை, 2011

வடக்கில் தேர்தல் சுவரொட்டிகள் அகற்றப்படவில்லையாம்

வடக்கில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்காக ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் பதாகைகள் சில இன்னமும் அகற்றப்படாது இருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 65 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களுக்கான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் கடந்த 20ம் திகதி நள்ளிரவுடன் முடிவுக்கு வருவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு அனைத்து கட்சி உறுப்பினர்களும் தேர்தல் நிமித்தம் ஒட்டிய சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை நேற்று மாலை 4 மணிக்கு முன்னர் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக