புதன், 27 ஜூலை, 2011

கோல்டன் கீ மோசடி வழக்கின் சந்தேக நபர்களுக்கு பிணை வழங்க அனுமதி

கோல்டன் கீ மோசடி வழக்கின் சந்தேக நபர்கள் என கருதப்படும் லலித் கொத்தலாவல உட்பட ஏனைய ஏழு பேருக்கும் பிணை வழங்க கொழும்பு மேல்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

5 மில்லியன் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கும் அதேவேளையில் குறித்த சந்தேகநபர்கள் கடவுச்சீட்டினை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை தொடர்ந்தும் வழக்கிற்கு சமூகமளிக்காத மற்றுமொரு சந்தேக நபரான சிசிலி கொத்தலாவலவுக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

இதனையடுத்து வழக்கு விசாரணை நவம்பர் 17ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக