வெள்ளி, 22 ஜூலை, 2011

மட்டக்களப்பை தனியார் பங்களிப்புடன் அழகுபடுத்த திட்டம்

யுத்தம் மற்றும் சுனாமி உட்பட இயற்கை அனர்த்தங்களாலும் பெரிதும் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாநகரசபை பிரதேசத்தை தனியார்துறையினரின் பங்களப்புடன் பாரியளவில் அபிவிருத்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மேயர் திருமதி சிவகீதா பிரபாகரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஆராயும் விஷேட கலந்துரையாடல் நேற்று காலை மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் மேயர் சிவகீதா தலைமையில் நடைபெற்றது. பிரதிமேயர் ஜோர்ஜ் பிள்ளை மாநகர ஆணையாளர் உட்படபல உயர் அதிகாரிகளும் தனியார் துறையினரும் கலந்து கொண்டனர்.

வீதி அபிவிருத்தி நகரை அழகுபடுத்தல் உட்பட பல்வேறு அபிவிருத்தி பணிகள் இத்திட்டத்தினூடாக மேற்கொள்ளப்படவுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக