வெள்ளி, 22 ஜூலை, 2011

கிளிநொச்சி வாக்கு நிலையங்களை சென்றடைந்தது வாக்கு பெட்டிகள்

கிளிநொச்சில் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மூன்று பிரதேச சபைகளுக்கான தேரதல் வாக்கெடுப்புகள் 35 வாக்களிப்பு நிலையங்களில் நடைபெறவுள்ளது.

இதற்கான வாக்கு பெட்டிகள் இன்று காலை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டது.

பச்சிளப்பள்ளி, பூநகரி, மற்றும் கரச்சி ஆகிய மூன்று பிரதேச சபைகளுக்குமான தேர்தலே நடைபெறவுள்ளது. இம்முறை அனைத்து தேர்தல் செயல்பாடுகளும் கிளிநொச்சி மாவட்டத்திலேயெ முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக