வெள்ளி, 22 ஜூலை, 2011

பாதக நிறசுவையூட்டியினை பயன்படித்தினால் கடும் நடவடிக்கை

உடல் நிலைக்கு பாதகத்தன்மையை ஏற்படுத்தக்கூடிய சில நிறச்சுவையூட்டிகளை பயன்படுத்தி சமைக்கப்பட்ட உணவு பொருட்களை விற்பனை செய்யும் உரிமையாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும் தொடர்பில் நடவடிக்கை எடுக்க உணவுக் கண்காணிப்பாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறச்சுவையூட்டிகள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளை அடுத்தே கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

வெள்ளை அரிசியினை சிகப்பு நிற அரிசியாக உருமாற்ற உடலுக்கு பாதகத்தை ஏற்படுத்தக் கூடிய செயற்கை நிறச்சுவையூட்டிகளை ஒரு சில உணவு விடுதியினர் பயன்படுத்துவதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக