வெள்ளி, 22 ஜூலை, 2011

வட மாகாணத்தில் 96 சதவீதம் தபால் மூல வாக்களிப்பு

வட மாகாணத்தில் நேற்று மாலை வரை 96 சதவீதம் தபால் மூல வாக்களிப்பு பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாண மற்றும் வன்னித் தேர்தல் மாவட்டங்களில் தெரிவிக்கப்படுகிறது.

வட மாகாணத்தில் 20 உள்ளூராட்சி சபைக்கான தேர்தல் நாளை இடம்பெறவுள்ளது. இதற்கான தபால் மூலவாக்களிப்பு இந்த மாதம் 12ஆம் திகதி ஆரம்பமானது. யாழ்.மாவட்டத்தில் 4 ஆயிரத்து 902 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 264 பேரும் முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச சபைக்கு 30 பேரும் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

இதனடிப்படையில் நேற்று மாலை வரை யாழ்.மாவட்டத்தில் 4 ஆயிரத்து 540 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 251 பேரும், துணுக்காய் பிரதேச சபைக்கு சகலரும் தமது தபால் மூல வாக்களிப்பை அளித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக