புதன், 27 ஜூலை, 2011

சம்மாந்துறையில் இனந்தெரியாதோர் குடிசைகளுக்கு தீ வைப்பு

வளத்தாப்பிட்டி இஸ்மாயில்புர கிராமத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த 150 ற்கு மேற்பட்ட குடிசைகளில் 15 குடிசைகள் இன்று புதன்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

கடந்தகால சுனாமி அனர்த்தத்தின் போது கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, மாளிகைக்காடு போன்ற பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கென சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளத்தாப்பிட்டி இஸ்மாயில்புர கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக குடிசைகள் அமைத்துக் கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக