புதன், 27 ஜூலை, 2011

கட்சியினுள் காணப்பட்ட பிணக்கே தேர்தல் தோல்விக்கு காரணம்

ஐக்கிய தேசிய கட்சியினுள் காணப்பட்ட பிணக்குகள் உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது பாரிய விளைவினை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தேர்தல் காலத்தில் கட்சிக்குள் இடம்பெற்ற மோதல் காரணாமாக கட்சியினர் தேர்தல் தொடர்பான தெளிவான குறிக்கோளை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல தவறியமையே தோல்விக்கான காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கட்சியினுள் காணப்படும் பிணக்குகளை வெளிப்படையாக இன்றி கட்சி ரீதியாக கையாளப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக