வியாழன், 28 ஜூலை, 2011

கொழும்பில் 27 மணிநேர நீர்வெட்டு

எதிர்வரும் 30ம் திகதி கொழும்பு உள்ளிட்ட அதனை அண்டிய சில பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

பேலியகொட, வத்தளை, ராகம, ஜா-எல, வெலிசர, களனி, பியகம, கிரிபத்கொட மற்றும் கடவத்தை ஆகிய பிரதேசங்களில் இந்நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி எதிர்வரும் 30ம் திகதி சனிக்கிழமை காலை 9 மணி தொடக்கம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிவரையான 27 மணித்தியாலங்களுக்கு இந்நீர்வெட்டு அமுலில் இருக்கும்.

களனியில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் நீர்சுத்திகரிப்பு தொகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர திருத்த வேலைகள் காரணமாக இந்நீர்வெட்டு செயற்படுத்தப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக