செவ்வாய், 26 ஜூலை, 2011

வாகரையில் பஸ் விபத்து: 3 கர்ப்பிணிகள் உட்பட 12 ஆசிரியர்கள் படுகாயம்

மட்டக்களப்பு வாகரையில் இருந்து வாழைச்சேனைக்கு ஆசிரியர்களை ஏற்றிச் சென்ற மினி பஸ் ஒன்று வாகரை இராணுவ முகாமுக்கு அருகில் விபத்துக்குள்ளானதில் 12 ஆசிரியர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று பகல் 1.30 அளவில் இடம்பெற்றதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வேகமாகச் சென்ற பஸ் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் விபத்துக்குள்ளாகி தலைகீழாக கவிழ்ந்துள்ளதாக தெரியவருகிறது.

விபத்தில் காயமடைந்த 12 ஆசிரியர்களில் 8 பேர் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நான்கு ஆசிரியர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கவலைக்குரிய விடயம்தான், அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள நால்வரில் மூவர் பெண் ஆசிரியர்கள் என்பதோடு அவர்கள் கர்ப்பிணித் தாய்மார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விபத்து தொடர்பில் வாகரை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக