வியாழன், 28 ஜூலை, 2011

130 இலங்கைத் தமிழ் அகதிகள் தடுத்து வைப்பு

130 இலங்கைத் தமிழ் அகதிகள் துனி கிராமப்புர பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புரங்களில் அமைந்துள்ள முகாம்களில் வாழ்ந்து வந்தனர். ஆனால் கடந்த ஒரு கிழமையின் முன்பு இவர்கள் சந்தேகத்துக்கு இடமாக துனி கிராமத்தில் உள்ள தளுபுளம்மா லோவா கோவில் பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளனர் என பெத்தபுரம் பொலிஸ் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பொலிஸார் நேற்றையதினம் அகதிகளை அழைத்து அடையாள அட்டை குறித்து விசாரணை நடத்தியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அகதிகளுள் ஒருசிலரிடம் அடையாள அட்டை காணப்பட்டதாகவும் ஒருசிலரிடம் அடையாள அட்டை காணப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு அகதிகளின் முன்னையகால நடவடிக்கைகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக