செவ்வாய், 30 மார்ச், 2010

சிறிலங்காவில் நீதி தனிநபருக்கு சொந்தமாகிவிட்டது – அனோமா பொன்சேகா

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நெருக்கடியை ஏற்படுத்த, கட்சி உறுப்பினர் இருவருக்கு அரசாங்கம் 80 லட்ச ரூபாவை வழங்கியுள்ளது

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நெருக்கடிகளை ஏற்படுத்தி தேர்தல் வெற்றியைத் தடுக்க ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த இருவருடன் அரசாங்கம் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் »

தேர்தல் அதிகாரியின் வாகனத்தில் சுவரொட்டி ஒட்டி மகிந்த தரப்பு சாதனை

சிறிலங்காவில் எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் சிறிலங்கா அரச தரப்பு அதிக வன்முறைகளை மேற்கொண்டு வருவதாக கொழும்புத்தவல்கள் தெரிவித்துள்ள நிலையில் தேர்தல் அதிகாரியின் வாகனத்தில் சுவரொட்டிகளை ஒட்டி ஆளும் தரப்பு சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் »

இம்முறை தாம் ஆட்சி அமைப்போம் – ஐ.தே.மு

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, மற்றும் ஜனநாயக தேசிய கூட்டணி ஆகியவற்றின் ஆதரவுடன் நாடாளுமன்றத் தேர்தலின் பின் ஆட்சியமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் என ஐக்கிய தேசிய முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். மேலும் »

தேசிய பிரச்சனைக்கு அரசாங்கத்திடம் தீர்க்கமான நிலைப்பாடு இல்லை – ஜே.வி.பி

தேசிய பிரச்சனைக்கு தீர்வு என்ற விடயத்தில் அரசாங்கத்திடம் தீர்க்கமான ஒரு நிலைப்பாடு இல்லையென ரில்வின் சில்வா தெரிவித்துள்ளது. மேலும் »

அம்பாந்தோட்டை துறைமுக சீன உதவி தொடர்பில் தமக்கு ஆட்சேபனை இல்லை – இந்தியா

அம்பாந்தோட்டை வீரவில பகுதியில் அமைக்கப்பட்டு வரும் துறைமுகத்திற்கு சீன உதவி தொடர்பில் தமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லையென இந்தியா தெரிவித்துள்ளது. மேலும் »

சிறிலங்காவில் நீதி தனிநபருக்கு சொந்தமாகிவிட்டது – அனோமா பொன்சேகா

சிறிலங்காவில் நீதி தனிநபருக்கு சொந்தமாகிவிட்டதாக முன்னாள் சிறிலங்கா தரைப்படைத்தளபதியின் மனைவி அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார். புத்தளம் பகுதியில் வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் »

ஈ.பி.டி.பியினரால் கொலை செய்யப்பட்ட இளைஞரின் இறுதி நிகழ்வு

கடந்த வவுனியா நகரசபைத் தேர்தலில் ஈ.பி.டி.பியின் சார்பில் 06ம் இலக்கத்தில் போட்டியிட்ட ஜெயராஜ் என்கிற ஈ.பி.டி.பி குருவும், ஈ.பி.டி.பியின் ஒன்றியத்தைச் சேர்ந்த தினேஸ், ரமணி, துன்பம், நிரோ உள்ளிட்ட ஐவரும் கிருஸ்ணா என்கிற 25வயதான தங்கராசா கிருஸ்ணகோபால் என்பவரை கடுமையாக தாக்கிப் படுகொலை செய்துள்ளனர். மேலும் »

யாழில் நட்சத்திர விடுதி அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது

யாழ்ப்பாணம் நல்லூர் கச்சேரி வீதிப்பகுதியில் நட்சத்திர விடுதி ஒன்று கட்டுவதற்காக அடிக்கல் நாட்டும் வைபவம் ஒன்று நேற்று இடம்பெற்றது. மேலும் »

நளினி விடுதலை இல்லை ஏன்?: அரசாணை முழு விவரம்

நளினியை முன் கூட்டியே விடுதலை செய்யாதது ஏன் என்பதற்கான காரணங்களை விளக்கி உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு திங்கள்கிழமை தாக்கல் செய்த அரசாணையின் முழு விவரம்: நளினியை விடுதலை செய்வது தொடர்பாக சிறை ஆலோசனைக் குழு வேலூர் சிறையில் ஜனவரி 20-ம் தேதி கூடி பரிசீலித்தது. மேலும் »

பேர்லின் தமிழ் பெண்கள் கூட்டமைப்பினரின் கலை மாருதம் 2010

பேர்லின் மாநகரில் கடந்த 28.03.10 அன்று பேர்லின் தமிழ் பெண்கள் கூட்டமைப்பினரால் கலை மாருதம் 2010 வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. மேலும் »

எம்மினத்தின் அழியாத தேவையினை உணர்வோம் – வைத்திய கலாநிதி கந்தசாமி திருலோகமூர்த்தி

போரினாலும் இடப்பெயர்வாலும் மிகவும் நொந்து போய் குடும்ப உறவுகளையும் இழந்து நிற்கும் கிளிநொச்சி மாவட்ட மக்கள் மீது எதிர் வரும் பாராளுமன்ற தேர்தல் ஒரு சுமையாகவும் திணிப்பாகவும் இருந்த போதும் குறிப்பாக  இத்தேர்தலை எதிர் கொள்ளவேண்டியது எம்மின வரலாற்றில் மிக முக்கியமான கால அவசியமாகும். மேலும் »

சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவன் கபில்நாத் படுகொலை செய்யப்பட்டமைக்கு கண்டனம்

சாவகச்சேரி மாணவர் கபில்நாத் சிறிலங்கா அரசின் துணைபடைக்குழுவான ஈபிடிபியினரலா கொலைசெய்யப்பட்டமைக்கு தமிழத் தேசியததிற்கான மக்கள் முன்னணியைச்சேர்ந்த செ.கஜேந்திரன் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் »

சோனியா காந்தியின் சொற்படி நடப்போரைப் புறக்கணிப்போம் – திருமலை வேட்பாளர் ரவிகுமார்

இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் வழி நடத்தலில் செயற்படுவோரை மக்கள் இம்முறை தோ்தலில் புறக்கணிக்க வேண்டும் என, தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளரும், குச்சவெளி பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான உமாகாந்தி ரவிகுமார் கூறியுள்ளார். மேலும் »

தியாகதீபம் திலீபன் நினைவுத்தூபி அழிப்பைக்கண்டித்து இலட்சிய திமுக ஆர்ப்பாட்டம்

தமிழர் தாயகத்தில் தியாகதீபம் திலீபன் நினைவுத்தூபியை சிங்கள காடையர்கள் இடித்து அழித்ததைக்கண்டித்து இலட்சிய தி.மு.க. தலைவர் விஜய டி.இராஜேந்தர் தலைமையில் 29.03.2010 அன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்  இந்திய மத்திய, தமிழ் மாநில அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் »

தமிழர்கள் மொழியையும் நிலத்தையும் இழந்துகொண்டிருக்கிறார்கள்: உணர்ச்சிப்பாவலர் காசி ஆனந்தன்

தமிழகத்தில் மொழியையும், ஈழத்தில் நிலத்தையும் இழந்து கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள் என்று வேதனை வெளியிட்டுள்ளார் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன். மேலும் »

கிறிஸ்மஸ்தீவு ஏதிலிகளில் 89 பேர் சிட்னிக்கு மாற்றம்

அவுஸ்த்திரேலியாவின் கிறிஸ்மஸ்தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் 89 பேர் சிட்னி நகரிலுள்ள முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் »

குவைத்தில் துன்பங்களுக்குள்ளானவர்கள் பலர் இன்று சிறிலங்கா திரும்பினர்

குவைத் நாட்டில் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளான நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் இன்று அதிகாலை விமானம் மூலம் சிறிலங்கா திரும்பியுள்ளனர். மேலும் »

கண்ணிவெடிகளை அகற்ற அப்பாவி தமிழ் பெண்களை ஈடுபடுத்தும் இந்திய, சிங்கள ராணுவ அதிகாரிகள்

தமிழர் பகுதிகளில் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் அபாயகரமான பணிகளில் அப்பாவித் தமிழ்ப் பெண்களை சிறீலங்காராணுவம் ஈடுபடுத்தியுள்ளது. அவர்களுக்கு உதவியாக ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனராம். மேலும் »

ந‌‌ளி‌னியை ‌விடு‌வி‌க்க த‌மிழக அரசு மறுப்பு

மு‌ன்னா‌ள் ‌பிரதம‌ர் ரா‌‌ஜி‌வ் கா‌ந்‌தி கொலை செ‌ய்ய‌ப்ப‌ட்ட வழ‌க்‌கி‌ல் 19 ஆ‌ண்டுகளாக ‌சிறை‌யி‌ல் இரு‌க்கு‌ம் ந‌‌ளி‌னியை ‌விடுதலை செ‌ய்ய முடியாது எ‌ன்று செ‌ன்னை உய‌ர் ‌நீ‌‌திம‌ன்ற‌த்தி‌ல் த‌மிழக அரசு ப‌தி‌ல் அ‌ளி‌த்து‌ள்ளது. மேலும் »

மதம் – கவிப்பித்தன்

மதம் கொண்ட யானைச்சின்னத்தில்
பூனை போன்றொருவேடமணிந்து
முன்னாள் பிரதமர் இர(அ)ணில்
மனதில் மதத்தையும்.. கொள்கையில் மேலும் »

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக