ஞாயிறு, 31 ஜனவரி, 2010

பிரித்தானியாவில் வாக்கெடுப்பு சில மணி நேரங்கள் நீடிப்பு

1976ஆம் ஆண்டு தமிழீழத்தில் நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று இரண்டாவது நாளாக பிரித்தானியாவில் நடைபெற்று வருவதுடன், சில வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நேரம் நீடிக்கப்பட்டுள்ளது.
1 February 2010
[படங்கள்] மாவீரன் முத்துக்குமார் மற்றும் பதினெட்டு மாவீரர்கள் தங்களின் இன்னுயிரை ஈழத்தமிழர்களின் உரிமைக்காகவும் நல்வாழ்வுக்காகவும் ஈகை தந்து வரலாற்று நாயகர்களாக விளங்கியுள்ளனர். அளப்பரிய ஈகை தந்துள்ள இம்மாவீரர்களை நினைவு கூறும் வண்ணம், அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தில் வாழ் தமிழர்கள் முத்துக்குமாருடைய ஈகையின் ஓராண்டு நினைவு நாளையொட்டி 2010- ஆம் ஆண்டு ஜனவரி 29- ஆம் நாள் இம்மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் இன உணர்வு எழுச்சி நாள் புனித நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்வில் பல சிறுவர்களும் சிறுமிகளும் தங்கள் பெற்றோருடன் கலந்து கொண்டனர்.
31 January 2010
[படங்கள்] ஏ-9 பாதையில் வழி நெடுகிலும் புத்தருக்கு கோவில்கள் அமைக்கப்பட்டு சுற்றுமதில்களும் கட்டப்பட்டு வெள்ளைப் பூச்சுக்களும் பூசப்பட்டுவிட்டன. ஆனால், கிளிநொச்சியில் இராணுவத்தினரால் தகர்க்கப்பட்ட தண்ணீர் தாங்கியை தூக்கி நிறுத்த சிறீலங்காவிடம் பொருளாதார வளம் இல்லை.
31 January 2010
இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கு தொடர்பாக நீதிமன்றிற்கு சமர்ப்பிப்பதற்கு தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் இறப்புச் சான்றிதழ் சிறிலங்கா அரசிடமிருந்து இதுவரை கையளிக்கப்படவில்லை என்று இந்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.
31 January 2010
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினிக்கு முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 19 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் தன்னை விடுவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.   இது தொடர்பாக ஆய்வு நடந்து வருகிறது.
31 January 2010
[காணொளி] வன்னியின் இறுதி யுத்தத்தின் போது, ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர்களின் இடங்களில் ஒன்றான கிளிநொச்சி நகர் போரின் பின்னர் பரந்தன் சந்தியிலிருந்து திருமுறிகண்டி வரையிலான இடங்களின் காணொளிப்பதிவு
31 January 2010
குருதி வெறி கும்பல்களுக்கு
உடல் சுட்டு இன அடையாளம்
காண்பித்தவன்!
31 January 2010
ஜே.ஆர்.ஜயவர்த்தன வினால் அறிமுகம் செய்யப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமைக்கு தேர்தலொன்று நடத்தப்பட்டுள்ளது.
31 January 2010
தமிழன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஈழம்: வெளுக்குமா கிழக்கு நிகழ்வில் ஊடகவியலாளர் க.அய்யநாதன் பங்கேற்ற நிகழ்வு
31 January 2010
ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவுக்கு வெற்றி கிடைக்கவேண்டும் என்பதற்காக படையினர் காலம் காலமாக அமுல்படுத்தியிருந்த பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஆனால் இப்போது மஹிந்த நினைத்தபடி வெற்றி கிடைத்துவிட்டதைத் தொடர்ந்து இலங்கை ராணுவமும், கடற்படையும் தமது கட்டுப்பாடுகளை மீண்டும் மக்களுக்கு விதிக்கத் தொடங்கியுள்ளனர்.
31 January 2010
ஜெனரல் சரத் பொன்சோகவுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டே அம்பாறை மாவட்ட சிறீலங்கா இராணுவப் பயிற்சி கல்லூரியின் கட்டளை தளபதி பிரிகேடியர் துமிந்த கெப்பட்டிவலன கடந்த வெள்ளிக்கிழமை (29) இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
31 January 2010
எதிர்வரும் சித்திரை மாதம் 9 ம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்கா சுதந்திரதினத்திற்கு மறுநாள் நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்பட உள்ளதாகவும்
31 January 2010
சுவிஸ் பொது வானொலியின் செய்தியாளர் கரின் வெங்கரின் விசாவை ரத்துச்செய்யும் நடவடிக்கையை மகிந்த மீளப்பெற்றுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவில் இருந்து செயற்படும் சுவிஸ் பொது வானொலியின்
31 January 2010
இந்தியாவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராகப் பொறுப்பேற்றுள்ள சிவ்சங்கர் மேனன் விரைவில் கொழும்புக்கு பயணம் செய்ய இருப்பதாக புதுடில்லி அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேசிய பாதுகாப்பு ஆலோசகராக
31 January 2010
தமிழர்களுக்கான அரசியல் உடன்படிக்கைகளில் முக்கியமாக சனநாயக தமிழர் தலைவர்கள் பல வருடங்களாக சட்ட ரீதியாக கோரும் உரிமைகளை வழங்குவதில் மெத்தனப் போக்கே தொடர்கிறது. அதிகாரத்தை அனைத்து மாகாணங்களுக்கும் பகிர்ந்தளிப்பதே இதற்கு தீர்வாக அமையும் என அமெரிக்காவில் வெளியாகும் வோல் ஸ்ட்றீட் ஜேர்னல் பத்திரிகையில் வெளியான செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 January 2010
ஜனாதிபதித் தேர்தல் இலங்கையில் நடந்தாலும் அந்தத் தேர்தலில் இந்தியாவும், அமெரிக்காவும் போட்டி போட்டமை விசித்திரமான உண்மை.  எக்காலத்திலும் இல்லாத வகையில் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் இந்தியாவும், அமெரிக்காவும் கரிசினை காட்டியமை, இலங்கைத் திருநாட்டில் அமைதி நிலவுவதற்கும்  இனப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுவதற்குமான வாய்ப்பு கடினமானது என்பதையே சுட்டிநிற்கின்றது.
31 January 2010
முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா, எந்த நேரத்திலும் கைதாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சிறிலங்கா அரசாங்கத்தை கவிழ்க்கவும் மகிந்த ராசபக்சவை கொலை செய்யவும் அவர் திட்டமிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே சரத் பொன்சேகா கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 January 2010
[காணொளி] நம் மக்கள் முள்வேலியில் தவிக்க, நம் மக்களுக்காக பேசிய ஒவ்வொரு தலைவர்களின் மகிழ்ச்சியை பாருங்கள். திருமாவளவன், கனி மொழி, தி.ஆர். பாலு மற்றும் நம் ரத்தத்தை உறிஞ்சிய ரத்தத்தின் ரத்தங்கள் எப்படி வாதிடுகிறார்கள் என்று பாருங்கள்  …..
30 January 2010
சிறிலங்கா அரசு ஒரு புலம்பெயர் தமிழரை கடத்திக்கொண்டு சென்று யாரும் அறியாத இடத்தில் தடுத்துவைத்துள்ளது. இந்த கடத்தல் மக்களை இனம்தெரியாத இடங்களில் காலவரையற்று தடுத்துவைத்திருக்கும் நாடுகள் பட்டியலில் சிறிலங்கா சேர்த்துக்கொள்ளப்பட்ட சமகாலத்தில் இடம்பெற்றுள்ளது.
30 January 2010


மேலதிக செய்திகள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக