ஞாயிறு, 4 அக்டோபர், 2009

காதில் பூ சுற்றும் சிறீலங்காவின் காமெடி

சக இராணுவ வீரர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் இரண்டு படைச் சிப்பாய்கள் பலி
[ சனிக்கிழமை, 03 ஒக்ரோபர் 2009, 12:15.41 PM GMT +05:30 ]


சக இராணுவ வீரர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் இரண்டு படைச் சிப்பாய்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிமால் மெதிவக்க தெரிவித்துள்ளார்.
மன்னாரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாகவும், கடுமையான காயம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் இரண்டு படைச் சிப்பாய்கள் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

காயமடைந்தவர்கள் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைகள் ஆரம்பிக்க்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

http://www.tamilwin.com/view.php?2e30QHvcb33h9EYe4d46Wn5cb0bf7GU24d4aYp7200bJnLWSde23E2hP0cc2tj0Cde


செல்வன், வவுனியா 03/10/2009, 14:38
மன்னாரில் துப்பாக்கிச் சூடு! 2 சிறீலங்கா படையினர் பலி

மன்னார் பரப்புக்கடந்தான் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு சிறீலங்கா படையினர் பலியாகியுள்ளனர்.



வெள்ளிக்கிழமை (02.10.2009) இரவு பரப்புக்கடந்தான் பகுதியூடாகப் பயணித்த மூன்று சிறீலங்கா படையினர் மீது தானியங்கித் துப்பாக்கி ஒன்றின் சகிதம் வேட்டுக்கள் தீர்க்கப்பட்டிருந்தன.

இதில் படுகாயமடைந்த மூன்று சிறீலங்கா படையினரில் இரண்டு பேர் மன்னார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொழுது உயிரிழந்துள்ளனர்.

http://www.pathivu.com/news/3679/54/2/d,view.aspx

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக