கவர்ச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவர்ச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 17 ஜூலை, 2011

கவர்ச்சி களத்தில் குதித்துள்ள அஞ்சலி

கரண் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’  இப்படத்தினை வடிவுடையான் இயக்குகிறார் ‘அங்காடித் தெரு’ புகழ் அஞ்சலி கதாநாயகியாக நடிக்கிறார்.

இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் வித்யாசாகர். இன்று முதல் இப்படத்தின் பாடல்கள் வெளியாகின்றன.

வைரமுத்துவின் வரிகளுக்கு குமரி மாவட்டத்தின் பாரம்பரிய இசைக் கருவிகளைப் பயன்படுத்தி பாடல்களை உருவாக்கி இருக்கிறார் வித்யாசாகர்.

பாடல்களும், இசையும் புது அனுபவமாக இருக்கும் என இயக்குநர் தரப்பு தெரிவித்திருக்கிறது.

இப்படத்தின் கதை கேரள எல்லைப் பகுதிகளில் சர்ச்சைக்குரிய மனிதராக வாழ்ந்தவர் வெட்டோத்தி சுந்தரம்.

இவரின் வாழ்வை மையமாக வைத்து தான் வடிவுடையான் இப்படத்தை இயக்கி வருகிறார்.

இப்படம் குறித்து வடிவுடையான் கூறியதாவது:

தனி மனிதனின் வாழ்வியல் பதிவாக இந்தப் படம் உருவாகியுள்ளதால் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா சுதந்திரம் பெற்ற கால கட்டத்தில் தான் குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது.

வளர்ச்சி மிகுந்த பகுதி இந்த மாவட்டம். தமிழகத்திலேயே படித்தவர்கள் அதிகம் பேர் இங்கு தான் இருக்கிறார்கள்.

ஆனால் 80 சதவீத குற்றங்கள் இங்கு மலிந்திருக்கின்றன. ஏன் எப்படி ஆனது என்பதற்கான பதில் தான் இந்தப் படம்.

கரண், அஞ்சலி  முக்கிய பாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார்கள்.

இப் படத்தில் அனைவரும் குமரி மாவட்ட வட்டார வழக்கு மொழியிலேயே டப்பிங் பேசியிருக்கிறார்கள் என்றார்.

வெள்ளி, 15 ஜூலை, 2011

ஒஸ்தி படத்திற்காக சிம்பு தேடும் கவர்ச்சி நடிகை

இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற 'தபங்' படத்தை தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனைக்கு தகுந்த மாதிரி ரீமேக் செய்து வருகிறார்கள்.

இந்த 'ஒஸ்தி' படத்தில் சிம்பு நாயகனாக நடிக்கிறார்.

இயக்குனர் தரணி இயக்கத்தில், சல்மான் நடித்த நாயகன் கதாபாத்திரத்தில் சிம்பு ஆர்ப்பாட்டமாக நடித்து வருகிறார்.

இந்த படத்தில் வரும் கலக்கலான குத்தாட்ட பாடலில் ஆட்டம் போட நயன்தாரா, மலைகா அரோரா, ஸ்ரேயா சரண் ஆகிய நடிகைகளை நாயகன் சிம்பு அணுகியுள்ளாராம்.

ஆனால் சிம்பு மற்றும் இயக்குனர் தரணி இருவரும் இதை மறுத்துள்ளார்கள்.

நாங்க தற்போது படத்தின் வசனக்காட்சிகளை எடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம்.

அடுத்த மாதம் முதல் வாரம் வரை, இந்த படப்பிடிப்பு நடைபெறும்.

இந்தி படத்தில் வருகிற மாதிரி தளம் போட்டு சண்டைக்காட்சிகளை எடுக்காமல் நிஜமாகவே ஒரு கட்டிடத்தில் இருந்து இன்னொரு கட்டிடத்திற்கு தாவுகிற காட்சியை எடுத்துள்ளோம்.

இப்படி சவாலான சண்டைக்காட்சியை படமாக்கியுள்ளோம்.

”ஒஸ்தி” படத்தின் பாடல்கள் மொத்தத்தில் பட்டய கிளப்பும் என்பதை மட்டும் இப்போது சொல்லமுடியும் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.