செவ்வாய், 26 ஜூலை, 2011

இரண்டு லட்சம் கப்பம் செலுத்தி மகனை காப்பாற்றிய தந்தை

கல்கிஸ்ஸையில் கடத்தப்பட்ட சிறுவனை அவரது தந்தையார் கடத்தல்காரர்களுக்கு கப்பம் கொடுத்து மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடத்தல்காரர்களுக்கு இவர் 2 லட்சம் கப்பமாக செலுத்தியே தனது மகனை பாதுகாப்பாக மீட்டுவந்ததாக இவர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

கல்கஸ்ஸையில் கடத்தப்பட்ட சிறுவன் இன்று வீடு திரும்பியதும் சிறுவனிடமும் தந்தையாரிடமும் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

குறித்த சிறுவன் நேற்றைய தினம் கல்கஸ்ஸையில் இனம்தெரியாத நார்களால் வீடு புகுந்து கடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக