வெள்ளி, 22 ஜூலை, 2011

யாழ். கிளிநொச்சியில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள், பதாதைகளை அகற்றவும்

நாளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்காக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் வாக்களிக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு அருகில் ஒட்டப்பட்டுள்ள சகலவிதமான சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை அகற்றுமாறு தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அவ்வாறு தேர்தல் அதிகாரிகள் அவற்றை அகற்ற தவறும் பட்சத்தில் பொலிசாரை பயன்படுத்தி அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக