வியாழன், 28 ஜூலை, 2011

பொன்சேகா வைத்தியசாலை சென்றபோது இடையூறு - விசாரணை ஆரம்பம்

சரத் பொன்சேகாவை கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு அழைத்துச் சென்றபோது அங்கு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு தங்களுடைய கடமைகளை செய்யமுடியாது இடையூறு விளைவித்த சம்பவம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதென கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

சிறைச்சாலை அதிகாரிகள் செய்துள்ள முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் நீதிமன்றிற்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.

சரத் பொன்சேகாவை தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது கமராவுடன் வந்த ஒருவரும் அவருக்கு உதவிபுரிய வந்த மற்றைய நபரும் தமது கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக சிறைச்சாலை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பில் விசாரணை நடத்தவென எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை பெற்றுத் தருமாறு உத்தரவிடும்படி பொலிஸார் நீதிமன்றில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதன்படி குறித்த வீடியோ காட்சியைப் பெற்றுக் கொடுக்குமாறு உரிய தரப்பினருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக