செவ்வாய், 19 ஜூலை, 2011

சினிமாவை விட்டு விலகிவிட்டேனா?: நயன்தாரா மறுப்பு

தெலுங்கில் நடித்த ”ஸ்ரீராம ராஜ்யம்” படத்துடன் சினிமாவை விட்டு விடை பெறுவதாக வந்த செய்தியை நடிகை நயன்தாரா மறுத்துள்ளார்.

ரமலத்துக்கும், பிரபுதேவாவுக்கும் விவாகரத்து கிடைத்து விட்டதால், விரைவில் நயன்தாராவும், பிரபுதேவாவும் திருமணம் செய்ய இருக்கின்றனர்.

திருமணத்திற்கு பிறகு நயன்தாரா நடிக்க மாட்டார் என்றும், கடைசியாக தெலுங்கில் நடித்த ”ஸ்ரீராம ராஜ்யம்” படத்தில் சீதா தேவி கதாபாத்திரத்துடன் அவர் சினிமாவை விட்டு விலகுவதாகவும் செய்திகள் வந்தது.

ஸ்ரீராம ராஜ்யம் படத்தின் கடைசி நாள் சூட்டிங்கில் மலர் தூவி நயன்தாராவுக்கு விடை கொடுத்தனர். அப்போது கண்ணீர் மல்க அனைவரிடமிருந்து விடைபெற்றார். இந்நிலையில் சினிமாவை விட்டு விலகப்போவதாக நான் என்றுமே சொன்னதில்லை என்று நயன்தாரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், சினிமாவை விட்டு நான் விலகுவதாக வந்த செய்தி உண்மையில்லை. ஸ்ரீராம ராஜ்யம் படத்தில் அழுததற்கான காரணமே வேறு. அந்த படத்தில் நடித்த கதாபாத்திரத்தால் என்னை மீறி அழுகை வந்துவிட்டது. மற்றொரு பக்கம் படக்குழுவினர் பாட்டு பாடி, என்மீது பூக்கள் எல்லாம் தூவினர். இதுவும் என் அழுகைக்கு காரணம்.

அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு நான் நடித்த தமிழ், கன்னடம், மலையாள படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட்டாகியுள்ளது. என்னுடைய மார்க்கெட்டும் நன்றாக இருக்கிறது. அப்படி இருக்கையில், சினிமாவை விட்டு நான் விலகப்போவதாக யார் சொன்னது. அப்படி எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என்று நயன்தாரா தெரிவித்துள்ளார்.

நயன்தாராவின் இந்த அறிவிப்பிற்கு பிரபுதேவா என்ன சொல்லப் போகிறார்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக