சனி, 23 ஜூலை, 2011

இலங்கைத் தலைவரை காப்பாற்ற இந்தியா முயற்சி

ஈழத் தமிழர், தமிழக மீனவர் மற்றும் கச்சத்தீவு மீட்பு போன்ற பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மதுரையில் ஒன்றிப்பு கிறிஸ்தவ மனித உரிமை அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார்.

அவர் உரையாற்றுகையில் :-

இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலை குறித்து ஐ.நா. சார்பில் குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.

அக்குழு இலங்கைத் தலைவரை போர்க் குற்றவாளி என்று அறிவித்தது. அதன் பின்னரும் இலங்கைத் தலைவரை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த முடியவில்லை.

இது குறித்து மத்திய அரசு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

ஆனால், இலங்கைத் தலைவரை காப்பாற்றத் தேவையான அனைத்தையும் செய்து வருகிறது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக