சனி, 23 ஜூலை, 2011

வாக்கெடுப்பு நிறைவு - முல்லைத்தீவில் 65 % வாக்களிப்பு

உள்ளூராட்சி சபைத் தேர்தல் வாக்களிப்புகள் 4 மணியுடன் நிறைவடைந்துள்ள நிலையில் யாழ் வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப் பெட்டிகள் பொலிஸ் பாதுகாப்புடன் பஸ்ஸில் யாழ் மாவட்ட செயலகத்துக்கு எடுத்து செல்லப்படுகிறது.

இம்முறை மாவட்ட செயலகத்தியே வாக்கெடுப்புகள் எண்ணப்படவுள்ளன. இந்நிலையில் ஊர்வாகத்துறை வாக்குபெட்டிகள் ஹெலிகொப்டர் மூலம் யாழ் மத்திய கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து பஸ்ஸில் மாவட்ட செயலகத்துக்கு செல்லவுள்ளது.

இதேவேளை முல்லைத்தீவில் 65 சதவிகித வாக்கு பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் பத்திநாதன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக