திங்கள், 25 ஜூலை, 2011

தமிழ்த் தேசிய ஒருமைப்பாடு நிரூபிப்பு - சிவாஜிலிங்கம்

தேர்தலின் மூலம் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியத்தின் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் : -

2004ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவினால் தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தேர்தலில் வெற்றியீட்டியதாக பலர் தெரிவித்தனர். ஆனால் இன்று விடுதலைப் புலிகள் இல்லை இப்போதுகூட தமிழ் மக்கள் எம்மை வெற்றிபெறச் செய்திருக்கிறார்கள்.

இந்நிலையில் தமிழ் மக்கள் எமக்கு வழங்கியுள்ள ஆணையினை அரசும் சர்வதேச சமூகமும் மதித்து ஏற்றுநடக்க வேண்டும்.

இனப்பிரச்சினைக்கு தமிழ் மக்கள் தம்மை தாமே ஆழக்கூடிய தீர்வு குறித்து மக்களால் ஆணை வழங்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மாத்திரமே பேசப்பட வேண்டும். என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக