சனி, 23 ஜூலை, 2011

65 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் ஆரம்பம்

65 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் இன்று காலை ஏழு மணிக்கு ஆரம்பமானது. இவ்வாக்குப் பதிவுகள் மாலை நான்கு மணிக்கு நிறைவுபெறும். ஒரு மாநகர சபை, ஒன்பது நகர சபைகள், 55 பிரதேச சபைகளுக்கே இன்று தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.

நேரகாலத் தோடு வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

65 உள்ளூராட்சி சபைகளிலும் நடைபெறும் தேர்தலில் 26 இலட்சத்து 30 ஆயிரத்து 985 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர். இதன் மூலம் 875 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

5619 பேர் இந்த 65 சபைகளிலும் போட்டியிடுகின்றனர். 20 அரசியல் கட்சிகள், 72 சுயேச்சைக் குழுக்கள் சார்பில் இவர்கள் களத்தில் குதித்துள்ளனர்.

தேர்தல் நடைபெறும் பிரதேசங்களிலுள்ள சகல மக்களும் வாக்களிப்பதற்கு ஏதுவாக 2,226 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அதேவேளை 383 நிலையங்களில் வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் கூறினார்.

மொத்தமுள்ள 335 உள்ளூராட்சி சபைகளில் 234 சபைகளுக்கு கடந்த ஆண்டு (06.01.2010) தேர்தல்கள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் சர்வதேச கண்காணிப்பு அமைப்புக்கள், பெப்ரல், சி.எம்.சி.வி. போன்ற அமைப்புகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக