சனி, 23 ஜூலை, 2011

யாழில் இதுவரை 22.4 சதவீத வாக்குப்பதிவு

தேர்தல் ஆரம்பிக்கப்பட்டு 12.45 மணிவரையில் யாழ் மாவட்டத்தில் 22.4 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில் 52 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தீவகப்பகுதிகளில் 30 தொடக்கம் 40 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக