வியாழன், 28 ஜூலை, 2011

சனல் 4 நிறுத்த முடியாத பயணம் : சவாலை எதிர்கொள்வோம்

சனல் 4 தொலைக்காட்சியின் நடவடிக்கைகள் நிறுத்த முடியாத ஒன்று என்பதால் அதன் சவால்களை பொறுப்பேற்று முன்னோக்கிச் செல்வோம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் கருத்து தெரிவிக்கையில் :-

தீவிரவாதிகளின் தாக்குதலில் அவருடைய தாயின் கண் பாதிக்கப்பட்டமை அறிந்தும் புலிகளுடன் கொடுக்கல் வாங்கல் செய்வது போல முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் மகன் விமுக்தி பண்டாரநாயக்க இலங்கையர் என்று சொல்லிக் கொள்ள வெட்கப்படுவதையிட்டு நான் மிகுந்த கவலையடைகிறேன். நான் அவரை எண்ணி வெட்கப்படுகிறேன்.

முதலாவதாக சனல் 4 காணொளி வெளியிட்டதன் பின்னர் இன்னும் மூன்று தயாரித்து வைத்திருப்பதாக நான் கூறினேன். அன்று எமது நடவடிக்கையால் அவர்கள் அதனை வெளியிடவில்லை. சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிவித்து அது தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகிறோம்.

ஜனநாயக கோட்பாட்டுக்குள் செயற்படும் போது தெரியாத்தனமாக அவதூறான காணொளிகள் வெளிவருவதுண்டு. ஏற்பது ஏற்காதது அல்ல இங்குள்ள பிரச்சினை நாம் எமது கருத்தக்களை கூற வேண்டியவர்களுக்கு கூறுவோம். இது நிறுத்த முடியாத பயணமாகத் தெரிகிறது. அதனால் நாம் அந்த சவாலுக்கு முகங்கொடுப்போம், என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக