செவ்வாய், 26 ஜூலை, 2011

28ம் திகதி வெற்றி பெற்ற உள்ளூராட்சி சபைத் தலைவர் உபதலைவர் நியமனம் - த.தே.கூ

வெற்றிபெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தலைவர், உபதலைவர், மேயர், பிரதிமேயர்களுக்கான நியமனங்களை எதிர்வரும் 28ம் திகதி முன்பதாக அறிவிக்கவுள்ளதாக இலங்கைத் தமிழரசு கட்சி பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

நியமனங்கள் தொடர்பில் கட்சி விரைவில் ஒன்று கூடி தீர்மானிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் வீண் பிரசாரங்களையும் கோரிக்கைகளையும் கைவிடுத்து வெற்றியீட்டிய உள்ளூராட்சி சபைகளில் தமது சிறந்த பணிகளை வெளிப்படுத்த வேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக